பக்கங்கள்

22 நவம்பர் 2011

தொலைபேசி கட்டணங்களை ஸ்ரீலங்கா அரசு அதிகரிக்கிறது.

வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை அதிகரிக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
2012ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புகளுக்கு, நிமிடம் ஒன்றுக்கு விதிக்கப்படும் வரி ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னர் 2 ரூபா அறவிடப்பட்ட நிமிடம் ஒன்றுக்கான வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்கான வரி இனிமேல் 3 ரூபாவாக அறிவிடப்படவுள்ளது.
அத்துடன் நிமிடம் ஒன்றுக்கான உள்வரும் அழைப்புக் கட்டணமும் 0.7 டொலரில் இருந்து 0.9 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2 பில்லியன் ரூபாவை மேலதிக வருமானமாகப் பெற முடியும் என்று சிறிலங்கா அதிபர் சமர்ப்பித்த வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.