பக்கங்கள்

05 ஆகஸ்ட் 2011

மடிகணனியுடன் லாவகமாகத் தப்பிய திருடன்!

நேற்றைய தினம்(04.08.2011)பிற்பகல் இரண்டு மணியளவில் ஜெர்மனியின் எசன்
நகரினில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.அது தொடர்பாக எமக்கு கிடைத்த விபரம் வருமாறு:
எசன் கோல்ட்ஸ்மித் வீதியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்திற்கு அருகாமையில்
உள்ள தமிழர்களுக்கு சொந்தமான வீடொன்றினுள் பிற்பகல் இரண்டு மணியளவில் படுக்கையறை யன்னல் வழியாக திருடன் உட்புகுந்திருக்கிறான்.வீட்டின் முன் பகுதியில்
உரையாடிக்கொண்டிருந்த வீட்டார்,ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து எழுந்து பார்த்தபோது
ஒரு ஆபிரிக்கர் படுக்கையறையில் நின்று கொண்டிருப்பதைக்கண்டு,திருடன் என அலறிக்
கொண்டு வெளியே ஓடியிருக்கிறார்கள்.இதை லாவகமாகப்பயன்படுத்தி திருடனும்
தப்பிச்சென்றிருக்கிறான்.பின்னர் வீட்டார் உள்ளே சென்று பார்த்தபோது,மடிகணணியும்
கைத்தொலைபேசி ஒன்றும் திருடனால் எடுத்துச்செல்லப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
அண்மைக்காலமாக எசன் நகரில் உள்ள தமிழர் வீடுகளில் திருட்டுக்கள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.