பக்கங்கள்

28 ஆகஸ்ட் 2011

புளியங்கூடல் இந்தன் முத்துவினாயகர் ஆலய குருக்கள் காலமானார்!

புளியங்கூடல் இந்தன் முத்துவினாயகர் ஆலயத்தின் பிரதான குருவாக பல்லாண்டுகளாக ஆன்மீக பணியாற்றி வந்த சோமசுந்தரக்குருக்கள் சண்முகநாதக்குருக்கள் நேற்று (27.08.2011) காலமானார்.வரதர் ஐயா என அன்புடன் அழைக்கப்பட்டு வந்தவர்.பரம்பரை பரம்பரையாக தமது குடும்பத்தையே இந்தன் முத்து விநாயகர் ஆலய ஆன்மீக பணிக்காக அர்ப்பணித்து செயற்பட்டவர்கள் இவரது குடும்பத்தினர்.புளியங்கூடல் மக்களின் பேரன்புக்குரியவராக மட்டுமன்றி அயல் கிராம மக்களாலும் நேசிக்கப்பட்ட வரதர் ஐயாவினுடைய இழப்பு ஆன்மீக உலகிற்கு பேரிழப்பாகும்.கானவினோதன் வரதர் ஐயா அவர்களுக்கு புளியங்கூடல் மக்கள் சார்பிலும்,புளியங்கூடல்.கொம் சார்பிலும் இதய அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.