பக்கங்கள்

17 ஆகஸ்ட் 2011

மர்ம மனிதர்களின் தாக்குதலில் பெண் காயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவன்கேணியில் பெண் ஒருவர் மீது மர்ம மனிதர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். களுவன்கேணிக் கிராமத்திற்கு இரவு(15.08.2011) சென்ற மர்ம நபர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது கையில் வைத்திருந்த கூறிய ஆயுதத்தால் குத்தியுள்ளனர் இதனால் காயமடைந்து மயங்கி விழுந்த அந்தப் பெண்னை கிராம மக்கள் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தொடர்ச்சியாக நான்கு நாட்களாக இக்கிராமத்தில் மர்ம மனிதர்களின் பதட்டம் நீடிப்பதால் மக்களின் இயல்வு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதே நேரம் வந்தாறுமூலையில் உள்ள வியாபார நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் மீதும் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வந்தாறுமூலையில் உள்ள தனது கடையில் இருந்து வெளியில் வந்த குறித்த நபர் மீது வீதியில் மறைந்திருந்த மர்ம மனிதர்கள் மூவர் அவரின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு ஓடிச்சென்றுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த கடை உரிமையாளர் தற்போது மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.