பக்கங்கள்

20 ஆகஸ்ட் 2011

மாண்புமிகு முதல்வர் அவர்களே!தமிழர்களின் இன்னுயிரை காத்திடுங்கள்.

பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர் முழக்கங்களை எழுப்பினார்.
மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு சென்னையில் 20.08.2011 அன்று தொடர் முழக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காப்பாற்றுங்கள் என்ற வாசகம் அடங்கிய பனியனை அணிந்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த வைகோ உள்ளிட்ட தலைவர்களுக்கும் பனியன்கள் வழங்கப்பட்டன அவர்களும் பனியன்களை அணிந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று வைகோ முழங்க மற்ற அனைவரும் அதை திரும்ப கூறினர்.
மாண்புமிகு முதல்வர் அவர்களே மூன்று தமிழர்களின் இன்னுயிரை காத்திடுங்கள்
வேண்டுகிறோம் வேண்டுகிறோம் மூன்று தமிழர்களையும் காப்பாற்றும்படி வேண்டுகிறோம்
வேதனையோடு கேட்கிறோம், விம்மலோடு வேண்டுகிறோம், கருணையோடு காத்திடுங்கள்.
தடுத்திடுங்கள் தடுத்திடுங்கள் தடுத்திடுங்கள்
உலகம் முழுவதும் வாழ்கிற பலகோடி தமிழர்கள் வேண்டுகிறார்கள் தூக்கு தண்டனையை தடுத்திடுங்கள்.
ஜாதி, மத எல்லை கடந்து அனைவரும் கண்ணீர் மல்க கேட்கிறோம்.
உங்களை விட்டால் எங்களுக்கு திக்கில்லை. வழியில்லை.
மரண தண்டனையை ஒழித்து இந்தியாவுக்கே புரட்சி வழி காட்டுங்கள்
வரலாறு நன்றி சொல்லும்
வரலாறு உங்களுக்கு நன்றி சொல்லும்
தமிழ் சந்ததிகள் நன்றி சொல்வர்
நிரபராதி தமிழர்களை காப்பாற்றிடுங்கள்
உங்கள் பின்னால் நாங்கள் நிற்போம்
கட்சி, ஜாதி, மத எல்லைகளை கடந்து தமிழ் உலகம் உங்கள் பின்னால் நிற்கும்.
காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் மூன்று தமிழர்களை காப்பாற்றுங்கள்.
இவ்வாறு வைகோ தொடர் முழக்கங்களை எழுப்பினார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த பல்வேறு கட்சி, இயக்கங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கொடி உள்ளிட்ட அடையாளங்களை எடுத்து வரவில்லை. மூன்று பேரை காப்பாற்ற முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கும் வாசகங்களை கைகளில் வைத்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.