பக்கங்கள்

31 ஆகஸ்ட் 2011

சுதுமலையில் மர்ம நபரை பின்தொடர்ந்த இளைஞர்கள் மீது படையினர் தாக்குதல்!

இரவு நேரம் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய முன் பின் அறிமுகமில்லாத நபரைப் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் நாலாபுறமும் இருந்து வந்த சீருடையினரால் சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்டுக் கடுமையாகத் தாக்கப் பட்டதுடன் பாதுகாப்புக்காக அவர்கள் கொண்டு சென்ற கத்தி, பொல்லு, கோடரி போன்ற ஆயுதங்களும் அபகரிக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் சுதுமலை கிழக்குப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது. இது பற்றித் தெரியவருவதாவது, இரவு 9 மணியளவில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத வீதியால் வெளிச்சம் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் இறங்கி மெல்ல மெல்ல நடந்து சென்றுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர், ஏனைய இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு அந்த நபரைப் பின் தொடர்ந்து சென்றனர்.
நடந்துசென்ற அந்த நபர் அந்தப் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணைக்கு அருகில் உள்ள பற்றை வளவில் மறைந்து விட்டார். இவரைக் கண்டு பிடிப்பதற்காக இளைஞர்கள் சுற்றிவளைத்துத் தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது அந்தப் பகுதிக்குச் சைக்கிள்களில் விரைந்து வந்த சீருடையினர் இளைஞர்களைப் பிடித்துத் தாக்கியதுமல்லாமல் நீங்கள் தான் திருடர்கள் என்று கூறியதுடன், பாதுகாப்புக்காக இளைஞர்கள் கொண்டு சென்ற கத்தி, பொல்லு, கோடரி போன்ற வற்றையும் பறித்துச் சென்றுள்ளனர். சீருடையினர் அவர்களைக் கையடக்கத் தொலைபேசி மூலம் புகைப்படமும் எடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.