பக்கங்கள்

17 ஆகஸ்ட் 2011

சர்வதேச மன்னிப்பு சபையும் மரணதண்டனை கைதிகள் சார்பாக குரல்.

பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கு இந்திய நீதிமன்றம் விதித்துள்ள மரண தண்டனைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
குறித்த மூவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை இந்திய குடியரசுத் தலைவி பிரதீப பாட்டில் நிராகரித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 1998ம் ஆண்டு குறித்த மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் 1999ம் ஆண்டு உறுதிப்படுத்தியது.
இந்திய அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமைய குடியரசுத் தலைவி பிரதீபா பாட்டில் பொதுமன்னிப்பு வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
உலகின் சகல மரண தண்டனை விதிப்புக்களுக்கும் எதிர்ப்பை வெளியிடுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.
பொதுமன்னிப்பு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான தீர்ப்பை வழங்குவதற்கு 11 ஆண்டுகள் கடந்துள்ளதாகவும், இது மனிதாபிமானமற்ற செயலாகும் எனவும் மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமன்னிப்பு மேன்முறையீட்டு மனுக் கோரிக்கை தொடர்பான விசாரணைகளில் ஏற்படும் கால தாமதம் காரணமாக இந்திய நீதிமன்றங்களில் மரண தண்டனை நிறைவேற்றுவதில் நேர விரயம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2004ம் ஆண்டின் பின்னர் இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.