பக்கங்கள்

13 ஆகஸ்ட் 2011

சிறுமி மீது பெளத்த துறவி பாலியல் முறைகேடு!

மிஹிந்தலை ரஜமஹா விஹாரையின் பிரதம பிக்குவிற்கு எதிராக பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 13 வயது சிறுமி ஒருவரை பல தடவைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறித்த பௌத்த பிக்கு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குவை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலியல் துஸ்பிரயோகம் சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை காவல்துறையினர் நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டை விசாரணை செய்த நீதவான் தர்ஷிகா விமலசிறி சந்தேக நபரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். குற்றம் சுமத்தப்பட்டுள்ள பௌத்த பிக்கு பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.