பக்கங்கள்

29 ஆகஸ்ட் 2011

மண்டைதீவு கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் பலி!

யாழ்.மண்டைதீவுக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனர்வகள் இருவர் படகு கவிழ்ந்ததில் நீரில் அமிழ்ந்து வலையினுள் சிக்குண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் மூச்சுத்திணறலுக்கு உட்பட்டு யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு மீன்பிடிப்பதற்காக மண்டைதீவைச் சேர்ந்த யோசேப்பு நிக்சன் (வயது 21), அன்ரனி லியூட்( வயது 48) ஆகிய இருவரும் சென்றிருக்கின்றர்.
அவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளாகி கடலில் கவிழ்ந்திருக்கின்றது. இருவரும் நிலை தடுமாறி நீரினுள் விழுந்த போது இருவரும் தாம் கொண்டு சென்ற வலையினுள் சிக்குண்டிருக்கின்றனர்.
சிக்குண்டவர்களில் நிக்சன் வெளிவரமுடியாத அளவிற்கு வலையினுள் மாட்டிக்கொண்டமையினால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கின்றார்.
லியூட் மூச்சுத்திணறலுக்கு உட்பட்ட நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழந்த நிக்சனின் சடலமும் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.