பக்கங்கள்

10 ஆகஸ்ட் 2011

யாழில் தொடரும் படுகொலைகள் இருவர் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

அடித்துக் கொல்லப்பட்ட பின்னர் தூக்கிலிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் யாழ். நல்லூர் இராசபாத வீதியில் தோட்டத்திலிருந்து இரண்டு சடலங்கள் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன.இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சடலங்கள் கோண்டாவில் செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த அ.தனபாலசிங்கம், எம்.இந்துஷா இருவரினதும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை வாகனச் சாரதியான மேற்படி தனபாலசிங்கம் ஏற்கனவே திருமணமாகி 4 பிள்ளைகளின் தந்தையாவார். அதேபோல் இந்துஷா 2 பிள்ளைகளின் தாயாவார்.
இந்நிலையில் நெஞ்சில் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நேற்று மாலையே வைத்தியசாலையில் இருந்து வந்துள்ளார்.
இதற்கான ஆதாரங்கள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் வாழைத்தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதில் துவிச்சக்கரவண்டி, கையடக்கத் தொலைபேசி, உடுப்புகள், கடிகாரம், போன்றன உள்ளடங்கியிருக்கின்றது.
அதிகாலை தோட்ட வேலைக்குச் சென்ற மக்கள் சடலங்களை கண்டு கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
மேலும் தூக்கிலிடப்பட்டுள்ள முறை தொடர்பாக உடனடியாக சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், இது தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.