பக்கங்கள்

24 ஆகஸ்ட் 2011

கிறிஸ் பூதத்தை பிடிக்க முடியாத பொலிஸ் பத்திரிகையாளரை பிடிக்கிறது.

யாழ்ப்பாணம், நாவாந்துறையில் கிறீஸ் பூதத்தைப் பிடிக்க முடியாத பொலிஸார் பத்திரிகை புகைப்படப் பிடிப்பாளரைக் கைது செய்திருப்பதாக நேற்று செவ்வாய்க்கிழமை சபையில்தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கிறீஸ் பூதங்களைப் பிடிக்க அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை கிளப்பி பேசும் போதே ரணில் விக்கிரமசிங்க இந்தக் கேள்வியை எழுப்பினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
“யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட கிறீஸ் பூதப் பதற்ற நிலைமையினால் அங்குள்ள மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது பொலிஸ் வாகனமொன்று சேதமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அதை புகைப்படம் எடுக்கச் சென்ற உதயன் பத்திரிகை புகைப்படப்பிடிப்பாளரும் நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கிறீஸ் பூதத்தைக் கைது செய்ய முடியாத பொலிஸார் புகைப்படப் பிடிப்பாளரைக் கைது செய்கின்றனர். கிறீஸ் பூதத்தைப் பிடிக்க அரசாங்கம் என்ன செய்யப்போகிறது’ என்றார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய இந்தக் கேள்விக்கு அரச தரப்பிலிருந்து எவரும் பதிலளிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.