பக்கங்கள்

14 ஆகஸ்ட் 2011

பாலியல் பைத்தியங்கள்தான் கிறிஸ்பூதங்கள் என்ற பெயரில் அடாவடி!

கிறீஸ் பூதங்கள் என்ற போர்வையில் பாலியல் பைத்தியங்கள் 47 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கிராமப் புறப் பெண்களைத் தாக்கி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 6 வாரங்களில் நாட்டில் பல மாவட்டங்களில் இந்த கிறீஸ் பூதங்கள் தொடர்பான 30 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கீழாடை மட்டுமே அணிந்து உடல் எங்கும் கிறீஸை பூசுவது அந்த கிறீஸ் பூதங்களின் வழக்கமாகும். பிடிபடாமல் வழுக்கிக் கொண்டு ஓடுவதற்காக கிறீஸ் பூசப்படுகிறது. ஆனால், இங்கு மர்ம மனிதர்களே நடமாடுவதாக கூறுப்படுகிறது. இது வரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடெங்கும் கிறீஸ் பூதங்கள், மர்ம மனிதர்கள் தொடர்பாக வதந்திகளும் வேகமாக பரவுகின்றன. குற்ற நடவடிக்கைளில் ஈடுபடுவோரே இந்தப் புரளியை கிளப்பி விட்டிருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர். இந்த விடயம் கறித்து அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் மத்தியில் பீதியை இல்லாதொழிக்கமாறும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.