பக்கங்கள்

09 ஆகஸ்ட் 2011

புதிய போர்க்குற்ற ஆவணப்படம் இந்திய தொலைக்காட்சியில்!

இந்தியத் தலைநகர் புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.
இன்று செவ்வாய்கிழமை இரவு 7.30 தெராடக்கம் 9.30 வரை இந்த ஆவணத்திரைப்படம் ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ´இலங்கையின் கொலைக்களங்கள்´ என்ற ஆவணப் படத்தை 3 நாட்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பி இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஹெட்லைன் ருடே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றிரவு I witnessed Genocide: Inside Lanka’s Killing Fields என்ற ஆவணப்படத்தை இத்தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.