பக்கங்கள்

16 ஆகஸ்ட் 2011

புங்குடுதீவில் சிங்களவர்களை குடியேற்றும் முயற்சி எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

புங்குடுதீவுப் பகுதியில் தென்னிலங்கை சிங்கள மீனவர்களை குடியமர்த்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி உள்ளுர் மீனவர்களது எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. நேற்று மாலை கடற்படையினரது ஏற்பாட்டினில் நூற்றுக்கணக்கான தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் புங்குடுதீவுப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.இவர்கள் சிலிண்டர் பொருத்தி கடலட்டைமற்றும் சங்கு பிடிக்கப்போவதாக கடற்படையினரால் உள்ளுர் மீனவர்களுக்கு தெரிரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இந்திய மீனவர்களால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உள்ளுர் மீனவர்கள் தென்னிலங்கை சிங்கள மீனவர்களை அனுமதித்தால் தமது நிiலைமை மேலும் மோசமடையுமென எச்சரித்தனர்.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த கடற்படையினர் வலுக்கட்டாயமாக தென்னிலங்கை சிங்கள மீனவர்களை குடியமர்த்த முற்பட்டனர். இதையடுத்து உள்ளுர் மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. நேற்றிரவு ஆரம்பமான இக்குழப்பகரமான நிலை இன்று காலை வரை நீடித்தது.
தென்னிலங்கை சிங்கள மீனவர்களை குடியமர்த்த கடற்படையினர் மேற்கொள்ளும் கெடுபிடிகள் பற்றி உள்ளுர் மீனவ அமைப்புக்கள் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளென அனைவரதும் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தனர். இன்று காலை வரை இதே நிலையே நீடித்திருந்தது.
இதனிடையே அரசின் அகைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயம் தொடர்பினில் சுமுகமான தீர்வொன்றை பெற்றுத்தருவதாக தமக்கு உறுதி மொழி வழங்கியுள்ளதாக உள்ளுர் மீனவர்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே வடமராட்சி கிழக்கு பகுதிகளில் ஆயிரக்கணக்கான தென்னிலங்கை சிங்கள மீனவர்களை குடியமர்ந்து சிலிண்டர் பொருத்தி கடலட்டைமற்றும் சங்கு பிடிக்கும் தொழிலில் ஈடுபடடுவருகின்றளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.