பக்கங்கள்

21 ஆகஸ்ட் 2011

யாழ்,வைத்தியசாலை தாதியை வைத்தியர் தாக்கியதால் போராட்டம் வெடித்தது!

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரினால் தாதியொருவர் தாக்கப்பட்டமையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாதியை தாக்கிய வைத்தியரை உடனடியாக வைதியசாலையில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும்,அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தாதியரின் ஆர்ப்பாட்டம் காரணமாக அரை மணி நேரம் யாழ். வைத்தியசாலை வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதாகவும் யாழ்,செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.