பக்கங்கள்

06 ஆகஸ்ட் 2011

படை உளவாளி எனக்கருதப்படும் ஒருவர் தண்ணீர் ஊற்றில் கொலை!

இராணுவத்தினரின் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிவந்த குமிழமுனையைச் சேர்ந்த பிலிப் செல்வநாயகம் கொல்லப்பட்டுள்ளார் . இவருக்கு 48 வயது. அண்மையில் தனது வங்கி நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு குமிழமுனையைச் சேர்ந்த இவர் தண்ணீருற்று முறியடித்தேக்கம் காட்டின் ஊடாக சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார் . இவர் பல தமிழ் இளைஞர் யுவதிகளை சிங்கள இராணுவத்தினரிடம் காட்டி கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குமிழமுனைக்கு அருகில் உள்ள தேக்கம் காட்டுப் பகுதியில் தேக்கம் சாவடிக்கு அருகில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . எனினும் படை அதிகாரிகள் அச் சோதனைச் சாவடியில் படையினர் கடமையில் இல்லை எனவும் அவர்கள் லீவில் சொந்த இடங்களுக்குச் சென்று விட்டதாகவும் கூறுகின்றனர்.
சர்ச்சைக்குரிய வகையில் சந்தேகமான முறையில் இவரது மரணம் இடம்பெற்றுள்ள நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய வகையில் இவரது சடலத்தினை மீண்டும் அப்பகுதிக்கு கொண்டு வர 50 ஆயிரம் ரூபா வரை பணம் தேவைப்படுவதாக இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதில் ஒரு பகுதியை மீனவ சங்கம் தரும் எனவும் ஏனையவற்றை முல்லைத்தீவில் பணியாற்றுகின்ற அரச பணியாளர்கள் பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் வற்புறுத்தப்படுகின்றது. குறிப்பாக பாடசாலை ஆசிரியர்கள் இந்த வகையில் நிர்ப்பந்திக்கப்படுவது ஓரளவு சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.