பக்கங்கள்

09 ஜனவரி 2013

அநுராதபுரம் மல்வத்து ஓயாவில் பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மல்வத்து ஓயாவில் அமைந்துள்ள பள்ளிவாசல்  இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப் பட்டுள்ளதுஅநுராதபுரம் மல்வத்து ஓயாவில் அமைந்துள்ள பள்ளிவாசல், இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள பள்ளிவாசல் மீது ஏறிய இனந்தெரியாத குழுவினர் அதன் முன்பகுதியை தாக்கி சேதப்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் பள்ளிவாசல் சேதப்படுத்தப்படும் சத்தம் கேட்டு அயலவர்கள் வந்து பார்க்கையில் அக்குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக நாட்டில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.