பக்கங்கள்

14 ஜனவரி 2013

மது அருந்தி பொங்கலை வரவேற்றவரை எமன் அழைத்துச் சென்றார்!

மது அருந்தி பொங்கலை வரவேற்றவரை எமன் அழைத்துச் சென்றார் கிளிநொச்சி பரந்தன் சந்திக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று (14) காலை நடைபெற்ற விபத்தொன்றில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏ 9 வீதி, கரடிப்போக்குச் சந்தியில் இருந்து பரந்தன் நோக்கி துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த இருவரை பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பொலிஸ் வாகனம் மோதியதினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்துதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த விபத்து நடைபெறுவதற்கு முன்னர் பரந்தன் சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் எதிரே வந்து தரிப்பிடத்தில் நின்ற பேரூந்துடன் மோதிக் கொண்டதில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியதுடன் மற்றயவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தார். அதனையடுத்து படுகாயமடைந்தவர் முச்சக்கர வண்டியின் மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனையடுத்து அங்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியதுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மதுபோதையிலேயே வந்திருந்தமை தெரியவந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.