பக்கங்கள்

12 ஜனவரி 2013

சிறீதரனின் அலுவலகத்தில் சி 4 வெடிமருந்தாம்!சிங்களத்தின் பித்தலாட்டம்

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து 4 சீ வெடிமருந்துகள், ஆபாச இறுவட்டுகள், ஆணுறைகள் மீட்கப்பட்டதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கியுள்ளனர். இன்று சிறீதரனின் பத்திரிகை அலுவலகத்தில் தொடர்ந்து இடம்பெற்ற தேடுதலின் போது எந்த ஊடகங்களும் அனுமதிக்கப்படவில்லை. எனினும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையின் கிளிநொச்சி பெண் செய்தியாளரும் முள்ளிவாய்க்காலின் பின் ஞானஸ்தானம் பெற்று ஊடகவியல் தெரிந்த ஒரே பிரபல ஊடக ஜாம்பவான் தானே என தனக்கு பட்டம் சூட்டியவருமான ஒருவருமே தேடுதலின் போது படைப் புலனாய்வாளர்களால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பிரபல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே சிறீதரனின் அலுவலகத்தில் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் யுத்த வரலாற்றில் வடகிழக்கில் நடத்தப்பட்ட புலனாய்வாளர்களின் தேடுதலின் போது தமிழ்ப் பத்திரிகையாளர்களையும் அனுமதித்து அவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் என்றால் சிறீதரனின் அலுவலகத் தேடுதலாகவே இருக்க முடியும் என கொழும்பின் ஊடகவியலாளர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். இதே வேளை யாழ்ப்பாணத்திலேயே இருந்து தனது கடமைகளை ஆற்றும் இந்தப் பிரபல பத்திரிகையாளருக்கு இப்படி ஒரு தேடுதல் நடக்கப் போவதாக முன்னமே தகவல் தெரிந்திருக்க வேண்டும் எனக் கூறும் உள்ளகத் தகவல் ஒன்று அவர் ஏற்கனவே கிளிநொச்சிக்கு சென்று காத்திருந்ததாகவும் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.