பக்கங்கள்

06 ஜனவரி 2013

பாரிய மக்கள் போராட்டமொன்று நடாத்தப்படும் – ஜே.வி.பி!

பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது. அரசியல் சாசனத்திற்கு எதிராக செயற்பட்டால் சபாநாயகர், அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக குரல் கொடுக்கும் உரிமை நாட்டின் பொது மக்களுக்கு காணப்படுவதாகக் ஜே.வி.வி. சுட்டிக்காட்டியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தினர், புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராட்டம் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். சட்ட விளக்கம் அளிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றிற்கு காணப்படுவதாக அரசியல் சாசனத்தின் 125ம் சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் நீதிமன்றம் ஏற்கனவே சட்ட விளக்கத்தை அளித்துள்ளது. இந்த சட்ட விளக்கத்தை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றின் சட்ட விளக்கத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சபாநாயகர், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றி;ற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் தரப்பினருக்கு தண்டனை விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். உயர் நீதிமன்றத் தீர்ப்பினை விமர்சனம் செய்த குற்றத்திற்காக தற்போதைய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு நீதிமன்றம் தண்டனை விதித்திருந்ததாகவும், இதே நடைமுறை ஏனையவர்கள் விடயத்திலும் பின்பற்றப்பட வேண்டுமெனவும் கே.டி. லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.