பக்கங்கள்

08 ஜனவரி 2013

தனது இனத்திற்காக மீண்டும் குரல் கொடுத்தார் மாயா!

நேற்று முந்தினம் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்குச் சென்ற உலகப் புகழ் பாப் பாடகி மாதங்கி அருட்பிரகாசம்(மாயா) ஈழத் தமிழர் தொடர்பாக தனது கருத்தைப் மீண்டும் பதிவுசெய்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க விழா ஒன்றில் பாடல் பாட கோல் கோஸ்ட் என்னும் இடத்துக்குச் சென்ற மாயவை அங்குள்ள ஊடகங்கள் பேட்டிகண்டது. இந் நாடு மிகவும் பெரியது எனவே சிறுபாண்மை இனத்தவர்களை நாட்டுக்கு வெளியே வைத்திருப்பது நல்லதல்ல, அவர்களையும் இந்த நாட்டுக்குள் உள்வாங்கவேண்டும் என்று கூறியுள்ளார் மாயா. ஈழத் தமிழ் அகதிகள் பலர் அவுஸ்திரேலியா சென்றவேளை அவர்கள் அருகில் உள்ள பல தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களை விடுவித்து அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டுவரவேண்டும் என்பதனையே இவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். மாயா என்று அழைக்கப்படும் மாதங்கி அருட்பிரகாசம், ஒரு ஈழத் தமிழர் ஆவர். யாழில் வசித்துவந்த அவரது குடும்பம் பின்னர் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தது.இவரது பல பாடல்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.