பக்கங்கள்

18 ஜனவரி 2013

யாழ். நபரை ஏமாற்றி வாங்கிய வாகனத்தை போலி ஆவணங்களில் விற்க முயன்ற இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவரை ஏமாற்றி பெற்ற வாகனம் ஒன்றை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்குரனை பகுதியில் கைது செய்யப்பட்ட நபர்கள் அக்கரைப்பற்று மற்றும் அலுத்கம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றத்தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.