பக்கங்கள்

06 ஜனவரி 2013

குழந்தையை பற்றிப் பிடித்தபடி கிணற்றிலிருந்து தாயின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி,குஞ்சுப்பரந்தன் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து தாய் மற்றும் பிள்ளை ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 29 வயதான சுகுமார் நிசாந்தினி மற்றும் 4 வயதான சுகுமார் கிருத்திகன் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் நேற்று (05) மாலையிலிருந்து காணாமற்போயிருந்த நிலையில் இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கிணற்றில் மிதந்து கொண்டிருந்த தாயின் சடலம் பிள்ளையை பற்றிக் கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் உள்ள கிணறொன்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இரண்டு சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், கணவன் - மனைவிக்கிடையில் அண்மைக்காலமாக சச்சரவு இருந்து வந்துள்ளதாக பிரதேச மக்கள் கூறியதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.