பக்கங்கள்

27 ஜனவரி 2013

எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி மரணம்!

எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி துளசிகா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். யாழ். புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் துளசிக்கா (வயது 22) என்ற மாணவி காதல் தோல்வியால் தீயில் எரிந்து தற்கொலை செய்ய முயற்சித்ததாக சொல்லப்படுகிறது.கடுமையான எரிகாயங்களுடன் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துளசிகா என்ற அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று காலை அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.