பக்கங்கள்

20 ஜனவரி 2013

எரிந்த நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், ஆவரங்கால், சர்வோதய வீதியினைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் எரிந்த நிலையில் விசுவமடு பன்னிரண்டாம் கட்டைப் பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பவித்ரா வயது (21) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (20) காலை குறித்த பிரதேசத்தில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று அயலவர்களினால் கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக பிரதேச பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.