பக்கங்கள்

09 ஜனவரி 2013

விஸ்வரூபம் பட போஸ்டரில் தலைவரின் படம்!

நடிகர் கமலகாசன் நடித்து,இயக்கிவரும் திரைப்படம் விஸ்வரூபம். வழமைக்கு மாறாக பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப் படம், தீவிர முஸ்லீம்கள் குறித்து சித்தரிக்கும் படம் ஆகும். ஆனால் நேற்றைய தினம் திருச்சி போன்ற நகரங்களில், தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களோடு, நடிகர் கமலகாசன் கைகோர்த்து நிற்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்ததாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 300 கோடி செலவில், எடுக்கப்பட்ட இப் படம் எதிர்பார்த்த வசூலைத் தருமா என்ற பெரும் சந்தேகம் இருக்கும் நிலையில், புலம்பெயர் நாடுகளில் இத்திரைப்படத்தை ஈழத் தமிழர்கள் அதிகம் பார்க்கவேண்டும் என்ற நோக்கத்துக்காகத் தான் இவ்வாறு, போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. நடிகர் கமலகாசன் அவர்களின் ரசிகர் மன்றத்தினர் அவர் மேல் கொண்டுள்ள பற்றுதலால் இப்படிச் செய்திருக்கலாம்.... ஆனால் எமது தேசிய தலைவர் என்ன விளம்பரப் பொருளா ? என்று ஈழத் தமிழர்கள் மனம் வருந்துகின்றனர் என்பதையும், மறக்கலாகாது ! ஈழப் போராட்டத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத விஸ்வரூபம் படத்துக்கு இவ்வாறு ஒரு விளம்பரத்தை ஏன் கொடுக்கவேண்டும் என்று தமிழர்கள் நினைத்தால் அதன் விடை அனைவருக்கும் புரிந்துவிடும். பழம்பெரும் நடிகரான கமலகாசன் அவர்களை ஈழத் தமிழர்கள் எவரும் இங்கே விமர்சிக்கவில்லை. ஆனால் எமது தலைவரை தயவுசெய்து ஒரு விளம்பரப் பொருளாக மாற்றவேண்டாம் என்று தான் நாம் கேட்டுக்கொள்கிறோம். ஈழத்து உணர்வாளர்கள் பலர் தமிழ் நாட்டில் இருந்தும், எவரும் இதுவரை இதுகுறித்து வாய் திறக்கவே இல்லை என்பதும் பெரும் மனவருத்தம் தரும் விடையமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.