பக்கங்கள்

17 ஜனவரி 2013

நீண்ட போராட்டத்தின் பின் சட்டத்தரணிகள் கடமைக்குத் திரும்பினர்!

நீண்ட போராட்டத்தின் பின் சட்டத்தரணிகள் கடமைக்குத் திரும்பினர்இலங்கையின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக பிரச்சினையில் இதுவரை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவந்த இலங்கை வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் புதன்கிழமை மீண்டும் வேலைக்குத் திரும்பினர். இலங்கை உச்ச நீதிமன்றத்திலும், மேல் முறையீட்டு நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள் தங்களது பணிகளுக்கு திரும்பியதைப் பார்க்க முடிந்தது. மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை நீதிபதி மோஹான் பீரிஸ் தனது பணிகளை நேற்று தொடங்கினார். அவரை சந்தித்து வாழ்த்துச் சொல்லவும், வழக்கறிஞர்கள் வந்ததைப் பார்க்க முடிந்தது. இது தவிர, மோஹான் பீரிஸின் நியமனத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை என்று அந்த வழக்குத் தொடுத்தவரின் வழக்கறிஞர் விரான் கொரயா தெரிவித்தார். வழக்கறிஞர்கள் ஒன்றியத்தின் மூத்த வழக்கறிஞர் லால் விஜயநாயக்க பேசுகையில், இந்தப் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக சிலர் கூறுகிறார்கள். அது சரியல்ல. இந்தப் போராட்டத்தை மக்கள் ஆதரவுடன் பரந்து பட்ட அளவில் எடுத்துச் செல்ல, தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திவருவதாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.