பக்கங்கள்

16 ஜனவரி 2013

இலங்கை சட்ட ஆட்சியின் எதிர்காலம் கவலைக்குள்!

மொஹான் பீரிஸ் நியமனத்தால் இலங்கை சட்ட ஆட்சியின் எதிர்காலம் கவலைக்குள்: ICJ கண்டனம்புதிய பிரதம நீதியரசர் நியமனம் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்பாட்சி என்பவற்றின் எதிர்காலத்தை கவலைக்குள் தள்ளியுள்ளதென சர்வதேச ஜூரிகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. அரசியல் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்டு பிரதம நீதியரசர் பதவி விலக்கப்பட்டு புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டமை இலங்கையின் நீதித்துறை மீது ஏற்படுத்தப்பட்ட அவமானம் என சர்வதேச ஜூரிகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டமைக்கு சர்வதேச ஜூரிகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் நீதியரசராக நியமிக்குமாறு இலங்கை அரசுக்கு சர்வதேச ஜூரிகள் சபை அழுத்தம் கொடுத்துள்ளதோடு, ஷிராணியின் நடவடிக்கையில் பிழையிருந்தால் முறையாக அவரை பதவி விலக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.