பக்கங்கள்

10 ஜனவரி 2013

உதயன் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது தாக்குதல்!

உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் ஒருவர் விசமிகளால் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் கொண்டு சென்ற 1500 பத்திரிகை பிரதிகளும் அவரது புதிய மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து தீயிட்டு எரிக்கப்பட்டன மோட்டார் சைக்கிளும் பத்திரிகை பிரதிகளும் முற்றாக எரிந்து நாசமாகின இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் மாலுசந்திப் பகுதியில் நடைபெற்றுள்ளது. இன்று காலை உதயன் அலுவலகத்தில் இருந்து பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக எடுத்துச் சென்ற வேளை மாலுசந்திப்பகுதியில் வைத்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த விசமிகள் நால்வரால் இவர் அடித்து விழுத்தப்பட்டு பொல்லுகளால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் இவரின் தலைப்பகுதியில் தாக்க முற்பட்ட வேளை அவர் கையால் தடுத்துள்ளார். எனினும் அவர்களது தாக்குதல் கைப்பகுதியில் பலமாய் விழுந்ததினால் அவரது கையும் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் அவரை அருகில் உள்ள கானுக்குள் தூக்கி வீசியதுடன் மோட்டார் சைக்கிளுடன் பத்திரிகைகளை எரித்து விட்டு நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நாகேஸ்வரன் பிரதீபன் (30வயது)  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இன்று காலை மற்றுமொரு உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் மாலுசந்தியில் இருந்து வல்வெட்டித்துறைக்கு பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத நபர்கள் சிலரினால் துரத்தப்பட்டுள்ளார். ஆயினும் அவர் தன்னைப்பாதுகாத்துக் கொண்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.