பக்கங்கள்

07 ஜனவரி 2013

அகதிகள் முகாமில் இலங்கை தமிழ் பெண்களுக்கு பாலியல் தொல்லை!

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள் 42 பேர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் 23 பேர் தங்களை திறந்த வெளிமுகாமிற்கு மாற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்து வந்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சித்திரசேனன், போலீஸ் எஸ்.பி. ரூபேஷ் குமார் மீனா, கியூ பிரிவு டி.எஸ்.பி. ராமசுப்பிரமணியம், செங்கல்பட்டு டி.எஸ்.பி. மூவேந்தன், தாசில்தார் இளங்கோவன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பேரில் 14 பேர் தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று சிறப்பு முகாமிற்கு திரும்பினர். 9 பேர் வைத்தியசாலையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அரசு வைத்தியசாலையில் அவர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அகதிகள் முகாமில் உள்ள 2 லட்சம் பேர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறுகிறார்கள். ராமேஸ்வரம் முகாமில் எனக்கு தெரிந்த தங்கை ஒருவர் என்னை பாலியல் தொந்தரவிற்கு ஒரு அதகாரி அழைக்கிறார். அப்படி இல்லையென்றால் உனது அப்பா, அண்ணனை சிறப்பு முகாமில் அடைத்துவிடுவேன் என்று அச்சுறுத்துகிறார் என்று கூறி கதறி அழுதாள். இதுபோல வெளிநாட்டவர் தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். 14 நாட்களாக பட்டினி போராட்டம் நடத்துபவர்கள் உடல்நிலை பலவீனம் ஆன பிறகு அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 9 பேர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். 5 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். சிறப்பு முகாம் நிரந்தரமாக தேவையில்லை. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி யாருக்கும் ஆதரவு அளிக்காது. 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். அதற்குள் கட்சியை பலப்படுத்த வேண்டிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். 2021 சட்டமன்ற தேர்தல் எங்கள் இலக்காக அமையும். இவ்வாறு சீமான் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.