பக்கங்கள்

11 செப்டம்பர் 2011

எனது இறுதிச்சடங்கை சீமான்தான் நடத்தவேண்டும் என மணிவண்ணன் பேசினார்!

தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன்,சாந்தன்,முருகன், மூவரின் உயிர் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பிரமாண்ட கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் இயக்கம் சீமான் தலைமையில் நடந்தது.
இதில் சீமான்,இயக்குனர் மணிவண்ணன்,பேராசிரியர் தீரன்,தடாசந்திரசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டு உணர்ச்சி பொங்க பேசினார்கள்
கூட்டத்தில் பேசிய அனைவரும் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சி மற்றும் தினமலர் நாளிதழை விமர்சித்தும் பேசினார்கள்.
இயக்குனர் மணிவண்ணன் பேசும் போது ” நான் இறந்த பின்னர் என்னுடைய உடலை நாம் தமிழர் கட்சி சீமானிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர் தான் என்னுடைய இறுதிச் சடங்கை செய்ய வேண்டும்” என்றும் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.