பக்கங்கள்

13 செப்டம்பர் 2011

ஸ்ரீலங்கா மீதான சர்வதேச விசாரணைக்கு நாம் ஆதரவு வழங்குவோம்!

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னர் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கனடா பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுநாவாய நாடுகளின் தலைவர்களிடம் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கையில் மனித உரிமைகள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் உரிய முறையில் மு்ன்னெடுக்கப்படாத பட்சத்தில் 2013 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும் ஹாபர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பொதுநலவாய மாநாட்டினை கொழும்பில் நடத்துவதற்கு கனடா அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய நாடுகள் ஏற்கனவே மறுப்பு வெளியிட்டிருந்தன.
அத்துன் இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹாபர் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டினை புறக்கணிப்பதற்கு ஏனைய நாடுகளும் அதரவு வழங்குமென நம்புவதாகக் குறிப்பிட்ட ஹாபர் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இது அழுத்தமாக அமையுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தினால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கமைவாக சர்வதேச விசாரணைகளை தாம் ஆதரிப்பதாக கனடா பிரதமர் இதன் போது தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.