பக்கங்கள்

18 செப்டம்பர் 2011

சாவகச்சேரியில் கோஷ்டி மோதல்!

இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலினால் இரண்டு பேர் வெட்டுக் காயங்களுக்குள்ளாகி சிகிச்சைக்கென சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்தச் சம்பவம் சாவகச்சேரியில் நேற்றுப் பிற்பகல் இடம் பெற்றது. சம்பவத்தில் பாலாவி தெற்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த அ.பிரகாஸ் (வயது 33) என்பவர் கையில் வெட்டுக் காயத்துக்குள்ளாகிப் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கச்சாய் தெற்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த க.நல்லதம்பி (வயது 63) என்பவர் தலையில் காயமடைந்து தொடர்ந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார். சாவகச்சேரிப் பொலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்துகின்றனர்.
பிரகாஸ் என்பவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் பிறிதொரு குழுவினரால் வெட்டப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் வீடு திரும்பியிருந்தார்.இந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.