பக்கங்கள்

29 செப்டம்பர் 2011

மண்டைதீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

கடந்த வாரம் பண்ணை வீதியில் மாலை 6மணியளவில் இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான
பயணிகள் ஊர்தியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.மோட்டார் சைக்கிள் பயணிகள்
ஊர்தியை முந்திச்செல்ல முற்பட்ட வேளையே இவ்விபத்து ஏற்பட்டு,மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும்
படுகாயமடைந்து யாழ்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தலைப்பகுதியில் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த
மண்டைதீவு 6ம் வட்டாரத்தை சேர்ந்த கே.கிருஷ்ணரூபன்(22)என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கே.கவாஷ்கர்(22)கால் முறிவடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.