பக்கங்கள்

23 செப்டம்பர் 2011

வேலணையில் இனந்தெரியாதோர் அட்டூழியம்!குடும்பஸ்தர் பலி!

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கூரிய ஆயுதங்களினால் சரமாரியாகத் தாக்கியதில் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலியானதோடு அவரது மனைவியும் மகனும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் வேலணை இரண்டாம் வட்டாரத்திலுள்ள செல்வநாயகம் வீதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 4 பிள்ளைகளின் தந்தையான சபரிமுத்து யேசுதாசன் ( வயது 57) என்ற குடும்பஸ்தர் வாள்வெட்டுக்கிலக்காகி பலியானவராவார். அவரது மனைவி யேசுதாசன் ரஞ்சனாதேவி (வயது-43), யேசுதாசன் முகுந்தன் (வயது-18) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலத்தை ஊர்காவற்றுறை நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா நேரில் சென்று பார்வையிட்டதோடு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல் வெளியாகவில்லை என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்: இக் கொலைச் சம்பவத்தினையடுத்து வேலணையில் பதற்றமான சூழ் நிலை காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.