பக்கங்கள்

26 செப்டம்பர் 2011

ஸ்ரீலங்காவிற்கு கடைசி நேரத்திலும் ஆபத்து வரலாம்!

ஜெனீவாவில் மனிதவுரிமைகள் பேரவையின் 18ஆவது அமர்வு இடம்பெற்று வருகிறது. இன்னும் நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த அமர்வில் தமக்கு எதிரான பிரேரணை எதுவும் சமர்ப்பிக்கப்படாது என்று இலங்கை அரசு உறுதி செய்து கொண்டது. அமைச்சர் மகிந்த சமரசிங்க மீண்டும் ஒருமுறை ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமையே பிரேரணைகளைச் சமர்ப்பிக்கும் இறுதி திகதி என்பதன் காரணமாகவே இந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தது.
எனினும் இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றுக்கு கனடா இறுதி நேரத்தில் முயலக் கூடும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டில் விசாரணைகளை மேற்கொண்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பரில் வெளியாகும் நிலையில் அதனை எதிர்வரும் 19ஆவது மனிதவுரிமைகள் பேரவை அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற யோசனையைக் கொண்டுவர கனேடியக் குழு முயற்சித்து வருகிறது.
அதனைத் தற்போது நடைபெற்று வரும் 18ஆவது அமர்வின் எதிர்கால அட்டவணையில் சேர்க்க கனடா முயற்சிகளை மேற்கொள்ளலாம். எனினும் இதனைத் தடுப்பதற்காக அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் மீண்டும் ஜெனீவாவுக்குச் சென்று கலந்தாலோசனைகளை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.