பக்கங்கள்

12 செப்டம்பர் 2011

இளவாலையில் மீட்கப்பட்ட சடலத்தில் மர்மம்!

இளவாலை பிரதேசத்தின் உயரப்புலம் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கிணறொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை காலை படையினர் மீட்டுச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மக்கள் மேலும் தெரியவருகையில்.
நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் குறித்த பிரதேசத்தை சுற்றிவளைத்த படையினர் மக்கள் எவரையும் கண்டபடி வீதிகளிற்க்கு வரவோ வீதிகளில் நிற்கவோ அனுமதிக்கவில்லை. பின்னர் அப்பகுதியில் உள்ள பற்றைகள், புதர்கள், கைவிடப்பட்ட காணிகள் அனைத்தையும் சோதனையிட்ட படையினர் அப்பகுதியிலுள்ள கைவிடப்பட்ட கிணறொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை எடுத்துச் சென்றதை மக்கள் கண்டுள்ளனர்.
எனினும் அவ்விடத்திற்க்கு பொலிஸாரோ, நீதிபதியோ வராமையினால் இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவிக்க அச்சப்பட்ட நிலையில் மக்ள் இருந்துள்ளனர்.
எனினும் குறித்த சடலம் மர்ம மனினுடையதாக இருக்கலாம் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் குறித்த பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக மர்ம மனிதன் நடமாட்டம் இருந்து வருவதாகவும் இதனால் இப்பகுதிக்கு வந்த மர்ம மனிதனுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த மர்ம மனிதன் தற்செயலாக கிணற்றில் விழுந்திருக்கலாம் அல்லது யாரேனும் பிடித்து பின்னர் கொன்று வீசியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.