பக்கங்கள்

13 செப்டம்பர் 2011

இப்படியும் கேவலம் கெட்ட பிறவிகள்!

கோவை மாநகரத்தின், சுற்றுப்பகுதியில் இருக்கும் பொறியியல் தொழிற்சாலைகளில் வேலை செய்ய வட மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வந்து தங்கியுள்ளனர்.
போத்தனூர் பக்கம் உள்ள செட்டிபாளையத்தில் சிமெண்டு கலவை தயார் செய்யும் ஒரு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நூறுக்கும் மேற்பட்ட வட இந்திய வாலிபர்கள் வேலை செய்கிறார்கள்.
நேற்று இரவு, தண்டபாணி என்பவரின் தோட்டத்தில் கட்டிவைக்கப் பட்டிருந்த மாட்டுக்கன்று பலமாக
கத்தியது. “நாயோ நரியோ”தான் கன்றுக்குட்டியை கடிக்கிறது என்று பயந்த தண்டபாணி, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தனது தோட்டத்துக்கு ஓடியுள்ளார்.
தண்டபானியுடன் சிலர் கூட்டமாக ஓடியபோது, மாட்டுக்கட்டுத்தறைக்கு பக்கத்திலிருந்து நான்கு பேர் தப்பி ஓடியுள்ளார்கள்.
திருடர்கள் தான் என்று நினைத்து சத்தம் போட்டபடியே நான்கு போரையும் துரத்தியதில் ஒருவர் மட்டும் அகப்பட்டுக்கொண்டார். மற்ற மூவரும் தப்பிவிட்டனர்.
இதற்கிடையில் கன்றுக்குட்டியை பார்த்த சிலர் அதன் வாயிலிருந்து ரத்தம் கொட்டியதை பாத்துவிட்டு, கன்று குட்டியின் வாயை பிடித்து பார்த்தபோது அதன் நாக்கு அருக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பிடிபட்டவனிடம்(ஒரிசாவை சேர்ந்த பினோத் 18 ), எதற்குடா கன்றுக்குட்டியின் நாக்கை அறுத்தீர்கள் என்று கிராமத்து பொதுமக்கள் தென்னை மரத்தில் கட்டிவைத்து உதைத்து விசாரித்ததில் உண்மையை கூறினான்.
’’என்னோடு நிஸ்தார் 18, டேவிட் 20, பெகோர் 22, ஆகிய நான்கு பேரும் பக்கத்தில் உள்ள ரெடி மிக்ஸ்
கலவை தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறோம்.
இரவு 11 மணிக்கு கன்றுக்குட்டியை பிடித்து அதனுடன் உடலுறவு கொல்ல முயற்சி செய்தோம். அப்போது கன்றுக்குட்டி கத்தியதால், அதன் வாயில் துணையை வைத்து அடைத்தோம். அப்படியும் சத்தம் போட்டதால் சத்தம் வராமல் இருக்க மன்வெட்டியின் “கைபிடி”யை கழட்டி கன்றுக்குட்டியின் வாயில் வைத்து கெட்டியாக பிடித்துக்கொண்டு உறவு கொண்டோம்.
மறுபடியும் கன்றுக்குட்டி சத்தம் போட்டதால், அதன் நாக்கை அறுத்து விட்டு உறவுகொள்ள முயன்றபோதும் சத்தம் போட்டது. சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்ததும்தான் தப்பித்து ஓடினோம்’’ என்று கூறினான் கொடூரன்.
இது குறித்து செட்டிபாளையம் போலீசில் சில இளைஞர்கள் புகார் கொடுக்க சென்றனர். அப்போது பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர், வேறு காவலர்கள் வந்த உடனே வருவதாக கூறினார். ஆனால், விடியும் வறை யாரும் வரவில்லை.
இதற்கிடையில் நடந்த “மிருகவதை” சம்பவத்தை கேள்விப்பட்ட சிலர், மாட்டையே இப்படி செய்த பாவிகள் மனிதர்களாக இருந்தால் என்ன செய்வார்கள் என்று ஆத்திரம் கொண்டு ரெடி மிக்ஸ் கம்பெனியில் இருந்த நிஸ்தார், டேவிட், பெகோர் ஆகிய மூன்று கொடூரன்களையும் பிடித்துக்கொண்டு வந்து தென்னை மரத்தில் கட்டி வைத்து உதைத்துள்ளார்கள்.
காலை எட்டு மணி வரையில் பல தடவை போன் செய்தும், செட்டிபாளையம் போலிசார் வரத்தால், கோவை மாவட்ட எஸ்.பி. உமாவுக்கு தகவல் சொல்லிவிட்டு பிடித்து வைத்திருந்த நால்வரையும் கைகளை பின்னால் கட்டியபடியே “ஊர்வலமாக” காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அப்போதும் போலீசார் “விபரீதத்தை” உணராமல் மந்தமாக இருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் “மிருகத்தை” வதை செய்த “மிருகங்களின்” மீது நடவடிக்கை எடுக்காத “மிருகங்களை” கண்டித்து காலை 11 மணிக்கு செட்டிபாளையம் காவல் நிலையம் முன்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போரூர் துணை கண்காணிப்பாளர் சண்முகம், செட்டிபாளையம் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
வெளி மாநிலங்களில் இருந்து இது போன்ற கூலி ஆட்களை கொண்டு வந்து கம்பெனி நடத்தும் உரிமையாளரை கூட்டிக்கொண்டு வாருங்கள் என்று போராட்டக்காரர்கள் சொன்னர்ர்கள். ஆனால் கடைசிவரை உரிமையாளர் வாரவில்லை.
கன்றுக்குட்டியை கால்நடை மருத்துவரிடம் பரிசோதனைக்கு அனுப்பிய ஆய்வாளர் ரவிக்குமார், ஒரிசா மாநிலம், ஜுந்தர்காட் மாவட்டம், ஜகர்தார் கிராமத்தை சேர்ந்த இந்த நான்கு மிருகங்கள் மீதும், இந்திய தண்டனை சட்டம்-377, (இயற்கைக்கு முரணாக உறவுகொல்லுதல்) 429 மற்றும் 518 (மிருகங்களை
கொலை செய்ய முயற்சி செய்தல்) மிருகவதை தடை சட்டம்-24 பிரிவு உள்ளிட்ட சட்டபிரிவுகளில் கைது செய்துள்ளார்.
நன்றி:நக்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.