பக்கங்கள்

23 செப்டம்பர் 2011

நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக கையெழுத்திட இந்தியா மறுத்து விட்டதாம்!

நிபுணர்கள் குழுவின் அறிக்கையை ஏற்கக் கூடாது எனக் கோரும் கடிதத்தில் கையயாப்பமிட இந்தியா மறுப்புத் தெரிவித்துள்ளது. அது தொடர்பாக விவாதத்தில் பார்த்துக் கொள்ளலாம் என இந்தியா கூறிவிட்டது. ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கு செயலாளர் நாயகம் பான் கீ மூன் கையளித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையை ஏற்கக் கூடாது எனக் கோரும் கடிதம் ஒன்றில் சில நாடுகளிடம் இருந்து அரசாங்கம் கையொப்பங்களை பெற்றுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கோரிக்கை விடுக்கும் இக்கடிதம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தற்போதைய தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் எந்தவொரு சபையினதும் முறைப்படியான அங்கீகாரத்தைப் பெறாத நிபுணர்கள் குழுவின் அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும் இக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.அரசிற்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மலேசியா, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் கியூபா ஆகிய 9 நாடுகள் கையயாப்பம் இட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அதேவேளை இந்தியா உள்ளிட்ட முக்கியமான சில நாடுகளிடமிருந்து இக்கடிதத்தில் கையொப்பம் பெறுவதற்கு அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிபடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவ்விவகாரத்தில் முன்கூட்டியே எதுவும் செய்ய முடியாது எனவும் இது குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப்படும் போது பார்த்துக் கொள்ளலாம் எனவும் இந்தியா கூறி விட்டதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.