பக்கங்கள்

30 செப்டம்பர் 2011

பெண்களுடன் சேஷ்டை செய்தவர்களை காவலூர் பொலிசார் கைது செய்தனர்!

யாழ்.காரைநகர் கசூரினா உல்லாச கடற்கரையில் மதுபோதையில் பெண்களுடன் பாலியல் சேட்டை விட்ட இளைஞர் பத்து பேரை ஊர்காவற்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இளைஞர்கள் சிலர் தென்பகுதி இளைஞர்களுக்கு மது விருந்து வைப்பதற்காக கசூரினா பீச் சென்று உல்லாசமாக மதுவை அருந்தி விட்டு போதை தலைக்கேற அவர்களின் பாலியல் தேவைக்காக பெண்களிடம் சென்று அங்க சேட்டை விட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக பெண்களின் பெற்றோரினால் ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இளைஞர்கள் பத்துப் பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை தலா 2 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு ஊர்காவற்துறை நீதிபதி ஜோய் மகிழ் மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.