பக்கங்கள்

29 செப்டம்பர் 2011

பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்டோர் கட்டுநாயக்கா வந்தடைந்தனர்!

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் இன்று காலை 10.26இற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். LC6286 என்னும் விமானத்தில் 100 பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் மேற்படி 50 பேரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி நபர்களை தற்சமயம் தேசிய குற்றப் புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்களிடத்தே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை அகதிகள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவ்வாறு இலங்கை வந்தவர்களில் 42 ஆண்களும் 8 பெண்பளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.