பக்கங்கள்

28 செப்டம்பர் 2011

நெடுந்தீவு சுற்றுலா மையமாகிறது!

நெடுந்தீவு பிரதேசத்தை சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கென சுற்றுலாத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று குறித்த பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த பகுதியில் கடல் விமானங்களை தரையிறங்குவதற்கேற்ற வசதிகளை செய்வதற்கும், அங்குள்ள குதிரை போன்ற விலங்குகளை பாதுகாப்பதற்கும், வெளிநாடுகளைப்போன்று புற்தரைகளை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது நெடுந்தீவு இறங்குதுறைப் பகுதியை அண்மித்த பகுதிகளை ஆழமாக்கும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நெடுந்தீவில் குடிநீருக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், நீரைப் பெற்றுக்கொள்ள நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.