பக்கங்கள்

20 செப்டம்பர் 2011

யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் வெடிபொருட்களாம்!

மொனராகலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் கொண்டுசெல்லப்பட்ட சீ போ ரக வெடிபொருட்கள் மொனராகலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் நேற்றிரவு பேருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெடி பொருட்கள் 615 கிராம் எடையைக் கொண்டவை என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வெடிபொருட்கள் பஸ்சின் சாரதி ஆசனத்திற்குக் கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.