பக்கங்கள்

16 செப்டம்பர் 2011

போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்கக்கோரி பிரிட்டனில் போராட்டம்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு பிரித்தானியப் பாதுகாப்புச் செயலர் லியம் பொக்ஸ் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி பிரி. வடக்கு சொம்செற் தொகுதியில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நெயஸ்சீ நகர சதுக்கத்தில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தை அக்ற்நெளவ் என்ற அமைப்பு மற்றும் தமிழர்களும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் வீதியில் சென்றவர்களிடம் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததுடன் அது தொடர்பான மனுவொன்றிலும் கையெழுத்துக்களைத் திரட்டியுள்ளனர்.
வடக்கு சொம்செற் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான லியம் பொக்ஸ் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களைக் குறித்து அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று இவர்கள் கோரியுள்ளனர்.
இது தொடர்பான மனுவையும் ஆதரவாகத்திரட்டிய கையொப்பங்களையும் போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் லியம் பொக்ஸின் தொகுதி செயலகத்தில் கையளிக்கவுள்ளனர்.
போர்க்குற்ற விசாரணைக்கு லியம்பொக்ஸ் ஆதரவு தெரிவிக்கும் வரை தாம் தொடர்ந்து வடக்கு சொம்செற் தொகுதியில் தொடர்ச்சியாக இத்தகைய போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.