பக்கங்கள்

17 செப்டம்பர் 2011

போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி அவுஸ்திரேலியாவில் வட்டமேசை மாநாடு!

இலங்கைமீது யுத்தக்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் வகையில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வட்டமேசை மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 20ம் திகதி இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணையை வலியுறுத்துவதற்கு ஆதரவளிக்கும் நாடுகள் தொடர்பான விவரங்கள் மாநாட்டில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் ஐ.நா அமைப்பின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ், சர்வதேச ஜூரிகள் சபையின் தலைவர் ஜோன் டோவ்ட், நியூ சௌத் வேல்சின் முன்னாள் சட்டமா அதிபர் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.