பக்கங்கள்

29 செப்டம்பர் 2011

நாளை நான்தான் தலைவன்"விஜயகாந்த் பேச்சு!

வேலூர் மேயர் வேட்பாளராக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லதாவை ஆதரித்து, வேலூர் மண்டித்தெருவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர், ‘’ சுதந்திரம் அடைந்து, 65 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரோடு பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, பஸ் ஸ்டாண்ட் பிரச்னைகள் எல்லாம் உள்ளது. அதைப் பற்றி கவலைப்படாமல் ஒருத்தர் காட்பாடி பாலாற்றில் மணல் கொள்ளை அடித்து வருகிறார்.
வேலூர் பஸ் ஸ்டாண்டில், 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டாமா? நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். விஜயகாந்த் தனியாக வந்துபேசுவதாக நினைக்காதீர்கள். தெய்வம் எப்போதும் நேரில் வராது; மக்கள் ரூபத்தில்தான் வரும்.
கம்சனை அழிக்க ஒன்று சேர்ந்தோம். ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தீர்கள். இப்போது, இப்படிப்பட்ட தொண்டர்களை விட்டு விட்டோமே என, ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.
நேற்று, தே.மு.தி.க.,வுக்கு ஒரு எம்.எல்.ஏ., இப்போது, 29 எம்.எல்.ஏ.,க்கள். முன்பு, 71வது கட்சி என்று சொன்னார்கள். இப்போது, 1வது கட்சியாகி விட்டது. நாளை நாம்தான் தலைவன். நான் பொடிவைத்துப் பேசவில்லை. உங்களுக்கு புரிய வேண்டும் என்றுதான் பேசுகிறேன்.
தமிழகத்தில், 63 லட்சம் இளைஞர்கள் வேலைக்காக காத்துக்கொண்டுள்ளனர். ஆனால், காசு வாங்கிக் கொண்டுதான் கல்லூரிகளில் சீட் கொடுக்கின்றனர். படித்துவிட்டு வேலை இல்லாததால்தான், புரட்சிகள் வெடிக்கிறது. யாரையும் லஞ்சம் வாங்க விட மாட்டோம். உள்ளாட்சியில் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்கள்.
எங்களை வெற்றி பெற வைத்தால், தவறுகள் நடக்காது. எத்தனை காலம்தான் நீங்கள் ஏமாந்து கொண்டிருப்பது? இந்த சந்தர்ப்பத்தை விட்டால், வேறு சந்தர்ப்பம் வராது.
கடந்த முறை, ஜாதியை சொல்லி தன் மகனை மந்திரியாக்கி, எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார்கள்.
அவங்க ஜாதியைச் சேர்ந்தவர்களுக்காவது வேலை கொடுத்தார்களா? மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தந்தார்களா? அவர்கள் வளர்ச்சியைத்தான் பார்த்து வந்தனர். அவர்களுக்காக, சாலை மறியல் செய்தவர்கள், இன்னும் வழக்கு விசாரணை என்று அலைந்து கொண்டுள்ளனர்.
பல ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் போட்டனர். ஆனால், அந்த திட்டங்கள் பேப்பரில்தான் உள்ளது. மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்கள்தான் அவர்களை திருத்த வேண்டும்’’என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.