பக்கங்கள்

15 டிசம்பர் 2010

இந்திய முக்கிய பிரமுகர்கள் சிலரின் வீடுகளில் CPI முற்றுகை!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்கி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா தழுவி முக்கிய பிரமுகர்களின் வீடுகள் சீ.பீ.ஐ காவற்துறையினரின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளதாக எமது விசேட செய்தியாளர் தமிழகத்தில் இருந்து தெரிவித்துள்ளார்.
முக்கிய ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்களின் வீடுகளில் சீ.பீ.ஐ புலனாய்வுப் பிரிவினர் திடீர் தேடுதலை நடத்திக் கொண்டு இருப்பதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முக்கிய பிரமுகர் ஜெகத் கஸ்பார், நக்கீரன் துணை ஆசிரியர் காமராஜ், ராஜ்ரீவியின் ஊடகவியலாளர் ஒருவரது வீடு, மற்றும் முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட 27 பேரது வீடுகள் சீ.பீ.ஐ புலனாய்வுப் பிரிவினரின் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.