பக்கங்கள்

07 டிசம்பர் 2010

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு!சந்தேக நபர் கைது.

யாழ். பருத்தித்துறை கொட்டடிக் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை நேற்று முன் தினம் இரவு இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயது இளைஞன் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என பருத்தித்துறைப்பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து கூப்பிடு தொலைவில் சிறுமியின் அம்மம்மாவின் வீடு உள்ளது. சிறுமி இரவு 8.30 மணி அளவில் அம்மம்மாவின் வீட்டுக்கு தனியாக புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கின்றார்.
அந்நேரமே கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டு இருக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இம்முறைப்பாட்டை அடுத்து இளைஞனைப் பொலிஸார் தேடினார்.
தும்பளை கிராமத்தில் மாமியார் வீட்டில் ஒளித்து இருந்த இளைஞன் நேற்று கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.