பக்கங்கள்

30 டிசம்பர் 2010

பாதிரியாருக்கு தனியான இடம்.

வவுனியா சிறைச்சாலையில் சக கைதிகளினால் தாக்குதலுக்குள்ளான பாதிரியாரை தனிமையாக தங்கவைக்க சிறைச்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் சிறுவர் இல்லமொன்றைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றங் சாட்டப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்து பின்னர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட போது பாதிரியார் மீது சக கைதிகளினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் குறித்த பாதிரியார் சிறைச்சாலையில் தனிமையாக தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவிக்கின்றார்.
பாதிரியார் மீது தாக்குதல் மேற்கொண்ட மற்றும் சிறைச்சாலையில் பிரச்சினைகள் இடம்பெற காரணமாக இருந்த 11 கைதிகளும் இன்று மாலை 5 மணியளவில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து தற்போது வவுனியா சிறைச்சாலையில் 72 கைதிகள் வரை தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.