பக்கங்கள்

10 டிசம்பர் 2010

கலைஞரே காங்கிரசை தூக்கி சுமக்காதீர்கள்!-சீமான்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இன்று விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான அவர் சிறைக்கு வெளியே அமைக்கப்பட்ட மேடையில் ஏறி உரையாற்றினார்.
அப்போது, ’’தமிழகத்திலேயே ஜெயலலிதாவும், கலைஞரும் ஒரே ஒரு விவகாரத்தில் மட்டுமே ஒற்றுமையாக உள்ளார்கள்.
அந்த ஒற்றுமை கொள்ளை அடிப்பதை பற்றி பேசுவதில்தான்.
வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை இல்லாமல் அழிப்பதே எங்கள் நோக்கம். கூட்டணியில் இருந்தாலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஞானசேகரன் போன்றவர்கள் எங்கே நின்றாலும் தோற்கடிப்போம்.
கார்த்தி சிதம்பரம் எல்லாம் சவால் விடுகிறார்கள். கார்த்தி சிதம்பரமே! எங்களுடன் போட்டி போட கார்த்தியாக(சிதம்பரம்) வா!! சிதம்பரத்தை சேர்த்துக்கொண்டு வராதே.
காங்கிரஸ் கட்சி என்பது வெள்ளைக்காரன் ஆரம்பித்து வைத்த கட்சி. அந்த கட்சியோடு இணைந்து வராதே.
நானோ,திருமாவளவனோ தமிழர்களுக்காக தனித்து ஒரு கட்சியை உருவாக்கினோம்.
உங்களைப்போல அடுத்தவன் முதுகில் சவாரி செய்யவில்லை. இதோ வருகிறது தேர்தல். உங்கள் உலக தலைவனை ராகுல்காந்தியை அழைத்து வாருங்கள். போட்டி போடட்டும். மண்ணை கவ்வ வைத்து துரத்துவோம்.
கலைஞர் குடும்பமே காங்கிரசை தூக்கிசுமக்காதே. பீகாரிலேயே 4 இடங்களில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. தமிழகத்தில் அந்த இடம் கூட கிடைக்காது.
கலைஞரே! உங்கள் குடும்பம் ஆண்டது போதும். உங்களது குடும்பம் தமிழகத்திற்காக எவ்வளவு காலம்தான் உழைத்துக்கொண்டிருப்பது.
தயவு செய்து ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். புதியதாக நாங்கள் வந்து ஆளுகிறோம்’’ என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.